News April 27, 2024
சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்த டாடா

ஆப்பிள் நிறுவன செல்ஃபோன்களை அசெம்பிள் செய்ய அதீத திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் டாடா நிறுவன கிளையில் வைத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, அசெம்பிளிங் இயந்திரங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை டாடா நிறுவனம் தவிர்த்துள்ளது.
Similar News
News August 13, 2025
மேடையில் பேசுவோமா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்

அதிமுக – திமுக சாதனைகள் குறித்து மேடை போட்டு பேசுவோமோ என CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால் விடுத்துள்ளார். பர்கூரில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் என ஏழைகளுக்காக வழங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளதாக கூறினார். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.
News August 13, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி? விஜயகாந்த் வழியில் விஜய்?

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு உள்ளது. மதுரையில் அவர் போட்டியிட இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அவர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப கால தேர்தல் வெற்றியை இப்பகுதியிலிருந்து பெற்றார். இளைஞர்கள் அதிகளவில் இருப்பதாலேயே இந்த மாவட்டத்தை விஜய் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
News August 13, 2025
அக்டோபரில் இலவச லேப்டாப் வழங்க அரசு ஆயத்தம்!

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்காக <<17382505>>2 நிறுவனங்களை TN அரசு தேர்வு<<>> செய்து அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவக் கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு வரும் அக்டோபரில் முதற்கட்டமாக லேப்டாப் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2019 வரை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.