News November 11, 2024
ஏப்ரல் முதல் கணினிமயமாகும் டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை ஏப்ரல் மாதம் முதல் கணினிமயமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அரக்கோணம், ராமநாதபுரத்தில் இந்நடைமுறை சோதனையில் இருக்கும் நிலையில், சென்னையிலும் ஓரிரு வாரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தமிழகத்தில் முழுமையாக பில் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும். இதனால், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 பணம் வசூலிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.
Similar News
News August 5, 2025
லெஜண்ட் இயக்குநருடன் சேரும் வாரிசு நடிகர்!

தக்லைஃப் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்தபடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. காதல் திரைப்படங்களின் டிரெண்ட் செட்டரான மணிரத்னம் பட்டறையில் இப்போது இணைந்திருப்பது துருவ் விக்ரம் என்கிறார்கள். அவருக்கு ஜோடியாக லேட்டஸ்ட் சென்சேசன் ருக்மினி வசந்த் நடிப்பதாகவும் தகவல். வரும் செப்டம்பரில் ஷூட்டிங் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காம்போ எப்படி இருக்கும்?
News August 5, 2025
ராசி பலன்கள் (05.08.2025)

➤ மேஷம் – வரவு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – உதவி ➤ சிம்மம் – சுபம் ➤ கன்னி – வாழ்வு ➤ துலாம் – கவனம் ➤ விருச்சிகம் – நலம் ➤ தனுசு – பயம் ➤ மகரம் – லாபம் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – புகழ்.
News August 5, 2025
இருவருக்கு தொடர் நாயகன் விருது: காரணம் என்ன?

ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் ஹாரி ப்ரூக், சுப்மன் கில் தொடர் நாயகர்களாக தேர்வாகினர். இந்நிலையில் இருவீரர்கள் தேர்வானதற்கான காரணம் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாகவே இத்தொடரில் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள் எதிரணி பயிற்சியாளரால் தேர்வு செய்யப்படுகிறார்கள் . அதன்படி இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லம் கில்லையும், கம்பீர் புரூக்கையும் தேர்வு செய்துள்ளனர்.