News April 13, 2025
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் விடுங்க

மகாவீர் ஜெயந்தியை போல், புனித வெள்ளிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததில் ஏமாற்றம் அளிக்கிறது. உயிரை குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம் எனக் கேள்வி எழுப்பிய அவர், கிறிஸ்தவர்களின் கோரிக்கைக்கு அரசு மதிப்பளிக்காதது, அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எனத் தெரிவித்தார்.
Similar News
News September 5, 2025
வியக்க வைக்கும் இந்த உண்மை தெரியுமா?

மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல வியக்க வைக்கும் உண்மைகள் நம்மை சுற்றியே உள்ளன. அதை யாராவது நமக்கு சொல்லும்போது உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்போம். அப்படி ஆச்சரியங்கள் நிறைந்த தகவல்களை, உங்களுக்காக மேலே போட்டோஸாக பகிர்ந்துள்ளோம். இந்த அரிய தகவல்களை மற்றவர்களுக்கும் பகிரலாமே…
News September 5, 2025
BREAKING: PMK ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பாமக மூத்த தலைவரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மீது, அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், நல்வாய்ப்பாக அவர் தப்பியபோதிலும், அலுவலகத்தில் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. தற்போது ராமதாஸின் ஆதரவாளராக உள்ள ம.க.ஸ்டாலின், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
News September 5, 2025
சகோதரத்துவம் வளர உழைப்போம்: EPS வாழ்த்து

உலகெங்கும் மகிழ்ச்சியுடன் மிலாடி நபி கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை EPS தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் போதித்த சாந்தியும், சமாதானமும் சகோதரத்துவமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம் எனவும் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.