News April 9, 2025
நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் 11ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது. மேலும், மதுக்கடைகளுடன் இணைந்துள்ள பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள், ஹோட்டல்களில் இயங்கும் பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶‘பொய்’ சொல்லி தப்பிக்க நினைக்காதே, உண்மையை சொல்லி மாட்டிக்கொள்; ஏனென்றால் பொய் வாழவிடாது; உண்மை சாக விடாது. . ▶எழுந்து நில் ! விழித்தெழு ! இலக்கை அடையும் வரை நிறுத்தாதே ▶மனதிற்கும் மூளைக்கும் இடையேயான மோதலில், மனம் சொல்வதை கேளுங்கள் ▶ தன்னலமற்றவனாகவும் பொறுமையுடையவனாகவும் இருந்தால் வெற்றி உனது
News April 18, 2025
திமுக கூட்டணியில் சலசலப்பு

பொன்முடி மீது CM ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என கூட்டணி கட்சி எம்பியான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு பேராசியர் இப்படி மோசமாக பேசியிருக்க கூடாது. அவரின் கட்சி பதவியை மட்டும் பறித்தது பத்தாது என்பது பலரின் கருத்து. அது நியாயமான ஒன்றுதான். அதையே நானும் கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் பேச்சால் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 18, 2025
மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 3 ’

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், ‘இந்தியன் 3 ’ கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக Lyca நிறுவனம் அப்படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட சுபாஸ்கரன் இன்று மதியம் சென்னை வரவுள்ளார். இந்த சந்திப்பின்போது அன்பு & அறிவு இயக்கத்தில் ₹250 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள ‘KH 237’ படம் குறித்தும் கமல் பேச உள்ளாராம்