News March 19, 2025

ED விசாரணைக்கு தடை கோரிய டாஸ்மாக்

image

ED நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஐகோர்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் விவகாரத்தில் ED விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், சோதனையில் டாஸ்மாக் ஆவணங்களை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனைக்கு பின், ₹1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ED தெரிவித்தது.

Similar News

News July 8, 2025

அஜித் குமார் மரணம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்குடன் நிகிதாவின் நகை காணாமல்போன வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அஜித் குமார் கொலை வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 20-ம் தேதிக்குள் முடித்து இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 8, 2025

மலையாள நடிகர் சௌபின் சாகிர் கைது

image

பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப விகிதத்தையோ தரவில்லை என சிராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சௌபின் சாகிர், அவரது தந்தை உட்பட 3 பேரும் ஏற்கெனவே முன்ஜாமின் வாங்கி இருந்த நிலையில் விசாரணைக்கு பின் சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

News July 8, 2025

இன்டர்நெட் இல்லாமலே மெசேஜ் அனுப்பலாம்… புதிய ஆப்!

image

டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் CEO ஜாக் டோர்ஸி, ‘பிட்சாட் (Bitchat) என்ற புதிய மெசேஜிங் ஆப்-ஐ உருவாக்கியுள்ளார். இதற்கு இன்டர்நெட், போன் நம்பர், (அ) சர்வர் எதுவும் தேவையில்லை. புளூடூத் மூலம் peer-to-peer முறையில் இந்த ஆப்பில் மெசேஜ் அனுப்பலாம். தற்போது இது டெஸ்டிங்கில் உள்ளது. தனியுரிமை பாதுகாப்பு மற்றும் off-grid communication நோக்கில் பிட்சாட்டை உருவாக்கியுள்ளதாக ஜாக் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!