News February 11, 2025

இன்று டாஸ்மாக், இறைச்சி கடைகள் இயங்காது

image

வள்ளலார் நினைவு நாளையொட்டி வரும் 11ஆம் தேதி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனுடன் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள், ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அதேபோல், ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சி கடைகளை மூட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிப்பதுடன், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

image

இந்தியாவில் கேஸ் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதால், உள்நாட்டு LPG உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மூன்றே நாள்களில் 10%-ல் இருந்து 25% ஆக LPG உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் தயாரிப்பதில் முழுவீச்சில் ஈடுபடவும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளது. SHARE IT

News March 12, 2026

RCB அணியின் நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கல்

image

IPL தொடர் தொடங்குவதற்கு முன்னரே RCB அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு RCB-க்கு அதிக விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த ஜோஷ் ஹேசல்வுட், இந்த IPL-ல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவர் டி20 WC-ஐ தவறவிட்ட நிலையில், இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தெரிகிறது. ஏற்கெனவே மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் பங்கேற்பதில் சட்ட ரீதியான சிக்கல் உள்ளது.

News March 12, 2026

ALERT: இந்த வயதினருக்கு திடீர் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

image

இந்தியாவில் 45 வயதுக்கு குறைந்தவர்களின் திடீர் மரணங்களில், மாரடைப்புதான் முதன்மையான காரணம் என Indian Journal of Medical Research தெரிவித்துள்ளது. இதில் பலர் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாகவே தெரிகின்றனர். ஆனால், மன அழுத்தம், குறைவான தூக்கம், புகை- மது பழக்கம், சர்க்கரை, High BP, போதிய உடலுழைப்பு இல்லாமை, கண்டறியப்படாத இதய கோளாறுகள் ஆகியவற்றால் திடீர் மாரடைப்புகளுக்கு உள்ளாகின்றனராம். உஷார் மக்களே!

error: Content is protected !!