News April 7, 2025

டாஸ்மாக் முறைகேடு நிரூபணமாகி விட்டது: இபிஎஸ்

image

சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டியளித்த இபிஎஸ், டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என டாஸ்மாக் கோரிக்கை வைத்தது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு தவறு செய்தது நிரூபணம் ஆகிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இபிஎஸ் கூறினார்.

Similar News

News December 5, 2025

BREAKING: அரசு வாபஸ் பெற்றது.. புதிய அறிவிப்பு

image

விமான நிறுவனங்களுக்கான புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றுள்ளது. நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விமானி வாரத்திற்கு 2 நாள்கள் ஓய்வு பெறலாம், ஒரு இரவில் 2 விமானத்தை மட்டுமே விமானி தரையிறக்க வேண்டும் போன்ற விதிகளை DGCA அண்மையில் அமல்படுத்தியது. தற்போதைய புதிய அறிவிப்பால், விமான இயக்கத்தில் உள்ள பிரச்னைகள் தீரும் என கூறப்படுகிறது.

News December 5, 2025

இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்னை? என்ன நடக்கிறது?

image

மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும்போது. இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்சனையாக இருக்கிறது? DGCA-வால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட, விமானிகளுக்கு கூடுதலாக ஓய்வு நேரம் என்ற விதி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்காக DGCA 6-18 மாதம் கால அவகாசமும் வழங்கியது. இருப்பினும், இண்டிகோ கூடுதலாக ஒரு விமானியை கூட பணியமர்த்தவில்லை. இதுவே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

News December 5, 2025

பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

image

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

error: Content is protected !!