News February 23, 2025
டாஸ்மாக்கில் மது வகைகளுக்கு தட்டுப்பாடு

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக், எலைட் கடைகளில் கடந்த 20 நாட்களாக மது வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடை திறந்ததும் 2 மணி நேரத்தில் வருவோருக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனால் எஞ்சியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். QR கோடு முறையில் மதுபானங்கள் சப்ளை, மதுபான ஆலைகளில் இருந்து சப்ளை குறைந்திருப்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News February 23, 2025
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இன்டர்நெட்.. அரசு அறிவுறுத்தல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிஎஸ்என்எல் இணைய சேவை தரவுகளை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதை உடனடியாக செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை பெறாத பள்ளிகளும் உடனடியாக அதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
News February 23, 2025
ஹேப்பி நியூஸ்… அதிகரிக்கும் வரையாடுகள் எண்ணிக்கை

தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு(Nilgiri Tahr) தான். பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழக – கேரள வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்ட வரையாடுகளை பாதுகாக்க, கடந்த 2023ல் அரசு சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
News February 23, 2025
கூகுள் மேப் மூலம் கொள்ளை: ஞானசேகரன் வாக்குமூலம்

கூகுள் மேப் மூலமாக, பள்ளிக்கரணையில் சொகுசு பங்களாக்களை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள 150 சவரன் நகைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீதான திருட்டு வழக்குகள் குறித்த விசாரணையில், இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.