News March 23, 2025
தமிழன் ‘தமிழ்நாட்டை’ உருவாக்கவில்லை: சிபிஆர்

தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது; எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள், அதைப் பின்பற்றினர்; இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள், வரலாற்றை சிபிஆர் திரித்து சொல்வதாக விமர்சிக்கின்றனர்.
Similar News
News March 24, 2025
அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த உரையின் முடிவில் “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தையும் முதல்வர் முன் வைத்தார்.
News March 24, 2025
கிடுகிடுவென உயரும் பங்குச்சந்தைகள்

சில மாதங்களாக கடும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தைகள், கடந்த ஒரு வாரமாக மேல் நோக்கி உயர்ந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,658 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,984 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வங்கிகளின் பங்கு விலைகள் இன்று கணிசமாக உயர்ந்தன.
News March 24, 2025
முதல் கறுப்பின பெண் எம்பி ‘மியா லவ்’ காலமானார்

அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதியும், முன்னாள் எம்பியுமான மியா லவ் (49) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ஒஹையோ மாநிலத்தின் முதல் கறுப்பின எம்பி, வெள்ளையின ஆதிக்கம் கொண்ட குடியரசுக் கட்சியின் முதல் பெண் கறுப்பின எம்பி.யாகிய தனிச்சிறப்பு கொண்ட இவர் டிரம்ப்பை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.