News March 18, 2024
துணை ஜனாதிபதி பதவியை எதிர்பார்க்கும் தமிழிசை?

தமிழிசை துணை ஜனாதிபதி பதவியை எதிர்பார்ப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தேர்தலில் தோல்வி அடைந்தால் துணை ஜனாதிபதி பதவி உள்ளிட்ட உயர் பதவிகள் தருவார்கள் என அவர் எதிர்பார்க்கிறார். ஆழம் தெரியாமல் அவர் தேர்தல் அரசியலுக்கு மீண்டும் வருகிறார். தூத்துக்குடியில், கனிமொழியை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கப்போவது உறுதி என சூளுரைத்துள்ளார்.
Similar News
News November 5, 2025
‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழா

நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’-க்கு அடுத்து நாடு முழுவதும் பிரபலமானது தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’. சுதந்திர போராட்ட காலத்தில் தேச உணர்வூட்டி ஊக்கப்படுத்திய இப்பாடல், இன்றும் உத்வேகம் அளிக்கிறது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. வரும் நவ.7-ல், அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
News November 5, 2025
பொதுத்தேர்வுக்காக 2 – 5 நாள்கள் வரை விடுமுறை

2025 – 26 கல்வி ஆண்டிற்கான <<18193947>>10<<>>, 1<<18194621>>2-ம் வகுப்பு<<>> பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. அதில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2 – 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான இந்த இடைவெளி என்பது மாணவர்கள் சிரமமின்றி படிக்கவும், மன அழுத்தமின்றி தேர்வு எழுதவும் உதவும் என உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
News November 5, 2025
கவர்ச்சி பிம்பத்தை மாற்ற முயலும் ஸ்ரீலீலா

தெலுங்கு படங்களில் தன்னை பெரும்பாலும் கிளாமர் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார். அழுத்தமான கேரக்டர் கிடைக்காத விரக்தியில் இருந்த தனக்கு ‘பராசக்தி’ பட வாய்ப்பு கிடைத்ததாகவும், இப்படம் தனது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதன்பிறகு, தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி பிம்பம் மாறத்தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


