News April 18, 2025
பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதை கண்டறிந்த தமிழர்!

கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தவர் நிக்கு மதுசூதன் என்னும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் ‘Astrophysics & Exoplanetary Science’ பிரிவில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான குழுதான் James Webb தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளது. IIT-ல் பி.டெக் பட்டம் பெற்ற நிக்கு, Massachusetts யூனிவர்சிட்டியில் PhD முடித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
புதிய பிரசாரத்தை முன்னெடுக்கும் சீமான்

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி சீமான் புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த கடலம்மா மாநாட்டு மேடைக்கு கையில் ரிமோர்ட்டுடன் சீமான் வந்தார். அப்போது பெரிய திரையில் வீடியோ காட்சிகளுடன் விளக்கி பேசிய அவர், இனிமேல் டிஜிட்டல் முறையிலும் பரப்புரை செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளும் டிஜிட்டல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
News November 22, 2025
கிரிக்கெட் லெஜண்ட் பிரகாஷ் பண்டாரி காலமானார்

கிரிக்கெட், கோல்ப் உள்ளிட்ட போட்டிகளில் கலக்கிய லெஜெண்ட் பிரகாஷ் பண்டாரி(90) காலமானார். டெல்லியில் இருந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். 1955-ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்று அசத்தியவர். பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். அவரது சாதனையை போற்றும் வகையில் இன்று டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. #RIP
News November 22, 2025
தவெகவில் Cold War நடக்கிறதா?

தவெகவில் கோஷ்டி அரசியல் கொடிகட்டி பறப்பதாக பேசப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய்க்கு அனைத்துமாய் இருந்த புஸ்ஸி ஆனந்தின் நிலை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறதாம். காரணம், ஆதவ், நிர்மல் குமார் இருவரும் ஆளுக்கு ஒரு அரசியல் செய்கிறார்களாம். இதனால், ஆனந்த் மீதான லைம் லைட் குறைந்து வருவதாக பார்க்கப்படுகிறது. எனவே, அதிகாரத்தை தக்கவைக்க கட்சிக்குள் Cold War நடப்பதாக தவெகவினர் கூறுகின்றனர்.


