News April 18, 2025
பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதை கண்டறிந்த தமிழர்!

கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தவர் நிக்கு மதுசூதன் என்னும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் ‘Astrophysics & Exoplanetary Science’ பிரிவில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான குழுதான் James Webb தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளது. IIT-ல் பி.டெக் பட்டம் பெற்ற நிக்கு, Massachusetts யூனிவர்சிட்டியில் PhD முடித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
கேரளாவை பார்த்து மனம் மாறுங்கள் CM: நயினார்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைந்ததை சுட்டிக்காட்டி, உங்கள் சகாவைப் பார்த்தாவது மனம் மாறுங்கள் என CM ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என ஆடம்பர விழாக்களை நடத்தினால் போதுமா, அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற வேண்டாமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆட்சி முடியும் நேரத்திலாவது, மாணவர்கள் நலன் காக்க முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News October 24, 2025
உருவானது புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், புயல் சின்னத்தால் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்.28 வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News October 24, 2025
தீபாவளி சோகம்: 30 குழந்தைகள் பார்வை இழப்பு?

தீபாவளியில் கார்பைடு துப்பாக்கி வைத்து கொண்டாடிய 30 குழந்தைகள் <<18082464>>பார்வையை இழக்கும்<<>> அபாயம் உள்ளதாக ம.பி. அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 30 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 300 பேர் தீவிர கண் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று 14 குழந்தைகள் பார்வையை இழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


