News April 18, 2025
பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதை கண்டறிந்த தமிழர்!

கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தவர் நிக்கு மதுசூதன் என்னும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் ‘Astrophysics & Exoplanetary Science’ பிரிவில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான குழுதான் James Webb தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளது. IIT-ல் பி.டெக் பட்டம் பெற்ற நிக்கு, Massachusetts யூனிவர்சிட்டியில் PhD முடித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்

பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. முக்கியமாக, EPS தலைமையை ஏற்க மறுக்கும் டிடிவி, விஜய் பக்கம் செல்வாரா (அ) வேறு கூட்டணி அமைப்பாரா என்பதற்கு இதுவரை பதில் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளுக்குள்(பிப். 24)கூட்டணி முடிவை அறிவிப்பேன் என டிடிவி தெரிவித்துள்ளார். மேலும், 5-வது அணி அமைக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 7, 2025
உரிமைகளை கேட்போர் மதவாதிகளா? தமிழிசை

மத்தியில் திமுகவினர் அமைச்சராக இருந்தபோது ஏன் மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி சிந்திக்கவில்லை என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இஃப்தார் விருந்து, கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், எத்தனை குடமுழுக்குகளில் கலந்து கொண்டீர்கள் என்றும் காட்டமாக கேட்டுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உரிமையை தட்டி கேட்பவர்களை மதவாதிகள் என்று முத்திரை குத்துவதாகவும் தமிழிசை விமர்சித்துள்ளார்.
News December 7, 2025
உலகின் மிக நீளமான விமான பயணம்!

உலகின் மிக நீளமான பயணிகள் விமான பயணத்தை சீனாவின் China Eastern Airlines நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரம் முதல் அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரம் வரை மொத்தம் 29 மணி நேரம் இந்த பயணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,681 கிமீ தூரம் பறக்கும் இந்த விமானம், இடையில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


