News April 13, 2024
தமிழ் புத்தாண்டு: பூக்களின் விலை உயர்வு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1,000-லிருந்து ரூ.1,500ஆகவும், ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது ரூ.600க்கும், கனகாம்பரம் மற்றும் முல்லைப்பூ கிலோ ரூ.700, செவ்வந்திப்பூ ரூ.450, அரளி மற்றும் சம்பங்கி பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News November 13, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் HAPPY NEWS

TN-ல் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை (நவ.14) குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நேருவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவ.14-ஐ மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களே ரெடியா..!
News November 13, 2025
தமிழ் நடிகர் கைது விவகாரத்தில் புதிய திருப்பம்

மோசடி புகாரில் நெல்லையில் வைத்து பிக்பாஸ் பிரபலம் தினேஷ் <<18275184>>கைது<<>> செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தன்னை கைது செய்யவில்லை என்றும், இது நன்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட போலியான புகார் என்றும் தினேஷ் விளக்கமளித்துள்ளார். வள்ளியூரில் வேறு ஒரு பிரச்னையில் தான் வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருவதாகவும், தனது தொழிலில் உள்ள ஒரு சிலரால் இந்த புகார் போலியாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 13, 2025
டெல்லி குண்டுவெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது

<<18274461>>டெல்லி குண்டுவெடிப்பு <<>>சம்பவத்தில் லக்னோவை சேர்ந்த டாக்டர் பர்வேஸ் அன்ஸாரியை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது. இவர் ஏற்கனெவே கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷகித்தின் தம்பி என்று தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு தேவையான தொலைத்தொடர்பு வசதிகளை பர்வேஸ் அன்ஸாரி ஏற்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து எலக்ட்ரானிக் சாதனங்கள், லேப்டாப்-கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


