News August 6, 2025

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்கா: EPS

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது திருப்பூர் சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் மத, சாதி சண்டைகள் இன்றி தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது என்றும், ரவுடிகள் வேறு மாநிலத்துக்கு தப்பி சென்றதாகவும் கூறினார். ஆனால் தற்போது காவல்துறை அதிகாரியே வெட்டிப்படுகொலை செய்யப்படுகிறார் என்று தெரிவித்தார்.

Similar News

News August 7, 2025

கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

image

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.

News August 7, 2025

சூது செய்து பாமகவை பறிக்க துடிக்கும் அன்புமணி: ராமதாஸ்

image

அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் பாமகவை பறிக்க முயல்வதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணியின் தலைவர் பதவி ஜூன் மாதத்தோடு காலாவதியாகிவிட்டதால், நானே தலைவர் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், கூட்டணி முடிவால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறிய அவர், பொய்களையும், கட்டுக்கதைகளையும் கூறி ஐயா ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்துவிட்டார் என்று ஆதங்கப்பட்டார்.

News August 7, 2025

Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

image

1. குட்டி சிங்கத்தின் பெயர் என்ன?
2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
3. உயிரினங்கள் சுவாசிக்க என்ன வாயு தேவை?
4. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய ராணுவ தளபதி யார்?
5.உலகின் மிகச்சிறிய பறவை எது?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.
பதில்கள் Way2News-ல் மதியம் 12:30 மணிக்கு வெளியாகும்.

error: Content is protected !!