News October 13, 2025

4 நாள்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

image

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதற்கான அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், நாளை (அக்.14) முதல் அக்.17 வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

Similar News

News October 13, 2025

BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு திருப்பம்

image

கரூர் வழக்கில் CBI விசாரணை கோரி SC-ல் தாக்கல் செய்த மனுவில் தெரியாமல் கையொப்பமிட்டதாக மனைவியை இழந்த செல்வராஜ் கூறியுள்ளார். அதேபோல், சிறுவனை இழந்த பெண், தங்களுக்கு தெரியாமல் மோசடியாக வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, CBI விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் மோசடி என தெரியவந்தால் தீர்ப்பு ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக திமுக MP வில்சன் கூறியுள்ளார்.

News October 13, 2025

மோசடி என தெரிந்தால், கரூர் தீர்ப்பு ரத்தாக வாய்ப்பு: வில்சன்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை தொடரும் என்று வில்சன் தெரிவித்துள்ளார். SC தற்போதைய ஆணையை மட்டுமே வழங்கி இருக்கிறது; இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனக் கூறினார். மேலும், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால், நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 13, 2025

தீபாவளி தீக்காயங்களுக்கு ஒரே போன் கால் போதும்!

image

பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்நிலையில், தீபாவளி அன்று தீக்காயம் (அ) பிற அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் ‘108’ என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு ஏற்றார்போல், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!