News March 11, 2025

NO.1 தமிழ்நாடு தான்: ₹1 லட்சம் கோடி கடன்

image

2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு ₹1.13 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தையில் கடன் வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், 2024-25 நிதியாண்டில் ₹1.01 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாடு தான் அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் திரிபுரா மாநிலம் மட்டும் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை.

Similar News

News March 12, 2025

அப்பா என்றால் சிலருக்கு கசப்பு : சந்துரு தாக்கு

image

மத்திய பாஜக அரசை திடமாக எதிர்க்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஒரு தேசம், ஒரு தேர்தல் எனக்கூறி தனக்குத் தானே முடிசூட்டிக் கொள்ள ஒரு தலைவர் தயாராகி கொண்டிருக்கிறார் என மோடியை விமர்சித்த அவர், மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பவரை அப்பா என்று சொன்னால் என்ன தவறு. அப்பா என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு கசப்பாக இருக்கிறது என சாடியுள்ளார்.

News March 12, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 12) சவரனுக்கு ₹360 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,065க்கும், சவரன் ₹64,520க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ₹109க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,09,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், மீண்டும் இன்று உயர்வை கண்டுள்ளது.

News March 12, 2025

ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் கோரிய மின்சார வாரியம்!

image

மின் மீட்டர் அமைப்பதற்கான 2ஆவது டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இம்முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார்.

error: Content is protected !!