News March 11, 2025

NO.1 தமிழ்நாடு தான்: ₹1 லட்சம் கோடி கடன்

image

2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு ₹1.13 லட்சம் கோடியை திறந்தவெளி சந்தையில் கடன் வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல், 2024-25 நிதியாண்டில் ₹1.01 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாடு தான் அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் திரிபுரா மாநிலம் மட்டும் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை.

Similar News

News March 12, 2025

மரடோனா மரண வழக்கு: விசாரணை தொடங்கியது

image

கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.

News March 12, 2025

₹87 லட்சம் கோடி காலி

image

கடும் சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தைகள், சுமார் $1 ட்ரில்லியன் சந்தை மதிப்பை இழந்திருப்பதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ₹87 லட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் உச்சம் தொட்ட நிஃப்டி, அதிலிருந்து 16% மதிப்பினை இழந்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டிருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

News March 12, 2025

மகாராஷ்டிராவில் தீவிரமாகும் ஹலால் மட்டன் எதிர்ப்பு

image

மகாராஷ்டிராவில் ஹலால் மட்டன் எதிர்ப்பு இயக்கம் தீவிரமாகிறது. இதற்கு அமைச்சர் நிதிஷ் ரானே தலைமை வகிக்கிறார். அவருக்கு தேஜகூ தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். ஆடு, காேழி ஆகியவற்றை இந்து மத வழக்கப்படி கொல்லும் ஜத்கா முறையை ஊக்குவிக்கின்றனர். ஹலால் சான்றுக்கு பதிலாக மல்ஹர் சான்று அறிமுகப்படுத்தப்பட்டு, ஜத்கா கடைகள் ஒரே குடையின்கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

error: Content is protected !!