News July 6, 2024

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது: ஐ.பெரியசாமி

image

தமிழகம் சட்டம் ஒழுங்கு பிரச்னை இன்றி, அமைதி பூங்காவாக திகழ்ந்து வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பு, திமுகவை தவிர வேறு எந்த டீமும் இருக்காது என்ற அவர், 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருப்பவர்கள் திமுகவில் இணைந்து விடும் அளவிற்கு சிறப்பான ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கொலைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 23, 2025

அக். 14-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

image

அக்.14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல்நாளில், மறைந்த முன்னாள் MLA-க்கள் 8 பேர் & வால்பாறை MLA-வுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், 2025-26 கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. எத்தனை நாள்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. வந்தது ஹேப்பி நியூஸ்

image

குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

திமுக MPக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக MP-க்களின் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக போராட்டம் நடத்துவது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

error: Content is protected !!