News October 21, 2025

நாட்டிலேயே தமிழகத்தில் அதிக MBBS இடங்கள்

image

இந்தியாவில் MBBS இடங்களின் எண்ணிக்கை 1,37,600 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 73,300 இடங்களும், தனியாரில் 64,300 இடங்களும் உள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் 11,825 மருத்துவ இடங்கள் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா – 11,695, உ.பி., – 11,250 என இருக்கின்றன. இந்த மருத்துவ இடங்களின் அதிகரிப்பால், 1,000 பேருக்கு 1 டாக்டர் என்ற WHO பரிந்துரைத்த நிலையை வேகமாக அடைய உதவும் என நம்பப்படுகிறது.

Similar News

News October 21, 2025

‘ஆரஞ்சு அலர்ட்’ அப்படின்னா என்ன?

image

24 மணி நேரத்திற்கு 11.5 செ.மீ., – 20.4 செ.மீ., வரை பெய்யும் மழைக்கு (காற்றின் வேகம் மணிக்கு 41- 61 கி.மீ) <<18063158>>ஆரஞ்சு அலர்ட்<<>> விடுக்கப்படுகிறது. இதனை பெருமழை அல்லது மிகக் கனமழை என்று வானிலை ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். SHARE IT

News October 21, 2025

செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கடலூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு விடப்பட்டுள்ளது. SHARE IT

News October 21, 2025

அதிமுக, திமுக மோதலுக்கு ஆந்திர அமைச்சர் பதில்

image

ஆந்திராவில் கூகுள் AI மையம் அமைவது தொடர்பான அதிமுக, திமுகவின் மோதலுக்கு, அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் பதிலளித்துள்ளார். தமிழரான கூகுள் CEO-ஐ முறையாக அணுக அரசு தவறிவிட்டதாக அதிமுக சாடிய நிலையில், பாஜக அழுத்தத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் TN புறக்கணிக்கப்படுவதாக திமுக பதிலளித்தது. இதில், சுந்தர் பிச்சை இந்தியாவை (மாநிலம் பார்க்காமல்) தேர்வு செய்துள்ளதாக நர லோகேஷ் X-ல் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!