News December 3, 2024
தமிழக அரசிடம் போதிய திட்டமிடல் இல்லை: பிரேமலதா

ஃபெஞ்சல் மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள போதிய திட்டமிடல் தமிழக அரசிடம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட வேண்டும்” என்றார்.
Similar News
News April 28, 2025
மகன் குறித்த சர்ச்சை கருத்து.. கடுப்பான பும்ரா மனைவி

MI போட்டியை நேரில் காண வந்த பும்ரா மனைவி சஞ்சனா பும்ரா விக்கெட் எடுக்கும் போது துள்ளிக்குதித்தார். ஆனால் உலகம் அறியாத அவர்களது ஒன்றரை வயது மகன் அங்கத் அமைதியாக இருந்தான். இதை வைத்து சிலர் அங்கத்துக்கு ஏதோ பிரச்சனை உள்ளது போல் சமூக ஊடங்களில் பேச சஞ்சனா கடுப்பானார். என் மகனை பற்றி ஒன்றுமே தெரியாமல், இதுபோல பேசுவது வருத்தம் அளிப்பதாக சஞ்சனா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
News April 28, 2025
இன்னும் அதிகப்படுத்தலாமே..!

வெயிலில் பைக் ஓட்டவே மக்கள் பயப்படுகின்றனர். குறிப்பாக, ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது, தவித்து போய் விடுவார்கள். இதற்காக மாநகராட்சிகளின் சார்பில், சில இடங்களில் கிரீன் கலர் ஸ்கீரின்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்ற போதிலும், இது எங்கள் ஏரியாவிலும் கொண்டுவந்தால், நன்றாக இருக்கும் என்கிற கோரிக்கையும் அதிகமாக உள்ளது. இன்னும் எந்த ஏரியாவில் இந்த ஸ்கிரீன் வேண்டும்?
News April 28, 2025
கிடைக்குற இடத்துலலாம் Wifi கனெக்ட் பண்றீங்களா?

பொதுவாக எங்கு போனாலும், Free WiFi-யில் கனெக்ட் பண்ணும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால், அது ஆபத்தானது என மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கிறது. பாதுகாப்பற்ற இணைப்புகளின் மூலம் எளிதில் போனை ஹேக் செய்து, டேட்டா திருட்டு, நிதி இழப்பு போன்ற பிரச்னைகள் வரும் என CERT தெரிவிக்கிறது. அரசின் அங்கீகரிக்கப்பட்ட WiFi-கள் தவிர பிற WiFi-களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.