News February 10, 2025

பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு

image

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு குரோம்பேட்டை பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.10 தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பிப். 26இல் போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்கம் எச்சரித்திருந்தது.

Similar News

News September 9, 2025

SCIENCE: டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

image

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் பெரிய காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.

News September 9, 2025

BREAKING: நேபாள ஜனாதிபதி ராஜினாமா

image

நேபாளத்தில் இளைஞர்களின் புரட்சியால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு ஆட்சியை ராணுவம் கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 9, 2025

நேபாள் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977 – 9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!