News April 4, 2024
சொந்த ஊர் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களை, இலங்கை அரசு விடுவித்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் 19 பேரும் நேற்று கொழும்புவில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 19 தமிழக மீனவர்கள் நேற்று சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
Similar News
News January 23, 2026
பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்த <<18932257>>தீர்மானம்<<>> நிறைவேறியது. தீர்மானத்தை CM முன்மொழியும்போது, திமுக ஏதோவொரு தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இதை செய்வதாக EPS விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், PM மோடியை சந்திக்கும் EPS இத்தீர்மானம் பற்றி எடுத்துச் சொல்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
நெகிழ வைக்கும் 5 வயது சிறுமியின் போட்டோ!

சட்டவிரோதமான குடியேற்றத்திற்கு எதிராக USA அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மின்னசோட்டா மாகாணத்தில், அதிகாரிகளால் 5 வயது சிறுமி ஒருவரும் தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். என்ன நடக்கிறது என புரியாமல், அக்குழந்தை அழுதபடியே நின்ற காட்சி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. பள்ளியில் இருந்தே அச்சிறுமியை அதிகாரிகள் அழைத்துச் சென்றதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
News January 23, 2026
கணவரை கொன்றுவிட்டு ஆபாச படம் பார்த்த மனைவி

ஆந்திராவின் குண்டூரில் <<18922752>>நிகழ்ந்த கொலை வழக்கில்<<>> திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி இருவரும் இணைந்து இந்த கொலையை அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவநாகராஜுவுக்கு பிரியாணியில் 20 தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரது சடலம் அருகே அமர்ந்து மனைவி ஆபாச படம் பார்த்து மகிழ்ந்துள்ளார். அட கொடுமையே..!


