News September 2, 2025
தமிழக மீனவர்களுக்கு ₹1.45 கோடி அபராதம்

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 ராமநாதபுரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இவர்களுக்கு தலா ₹1.45 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் 18 மாத சிறை என தண்டனை விதிக்கப்பட்டதால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தினர், மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News September 2, 2025
₹500 நோட்டுகள் செல்லாது? Factcheck

செப்.30-ம் தேதியுடன் ₹500 நோட்டுகளை ATM-களில் நிறுத்தப்போவதாகவும், அதன் பிறகு ₹500 நோட்டுகள் செல்லாது எனவும் வாட்ஸ்ஆப்பில் மீண்டும் தகவல் பரவி வருகிறது. இதனை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) மறுத்துள்ளது. ₹500 நோட்டுகள் ரத்து தொடர்பாக RBI எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் ₹100, ₹200 நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
CINEMA ROUNDUP: சின்னத்திரையில் பார்த்திபன்!

*சின்னத்திரையில் ‘பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார் பார்த்திபன்.
*மாலை 7 மணிக்கு குமரன் நடித்துள்ள ‘குமார சம்பவம்’ பட ட்ரெய்லர் வெளியாகிறது.
*’மார்கன்’ படத்தில் நடித்து அஜய் திஷன் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘பூக்கி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
*Wednesday சீசன் 2 கடைசி 4 எபிசோடுகள் நாளை நெட்பிளிக்ஸ் OTT-யில் வெளியாகிறது.
News September 2, 2025
தீபாவளி பரிசு… சம்பளம் உயர்கிறது

மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் விலைக்குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். இதன் அடிப்படையில், தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 55%-லிருந்து 58%ஆக 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தமிழக அரசும் அகவிலைப்படியை 3% உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.