News August 9, 2024
தமிழக மீனவர்கள் இந்தியர்கள் கிடையாதா?: EPS

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இபிஎஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். “தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான் என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். எனவே அவர்களை விடுவிக்குமாறு, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Similar News
News August 13, 2025
நகை கடன் எந்த இடத்தில் எவ்வளவு கிடைக்கும்?

RBI வழிகாட்டுதலின்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகை கடன் வழங்குகின்றன. ₹1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைக்கு நிதி நிறுவனங்கள் ₹75,000 வரை (75%) கடன் வழங்கும். ஆனால், அங்கு வட்டி அதிகம் (12 – 24%). பொதுத்துறை வங்கிகள் சற்று குறைவாக ₹60,000 – ₹70,000 வரை கடன் வழங்கும். ஆறுதல் என்னவென்றால் அங்கு வட்டி விகிதம் குறைவாக (7.25 – 9%) இருக்கும். தேவையை பொறுத்து தேர்வு செய்யுங்கள் நண்பர்களே! SHARE IT.
News August 13, 2025
அதிகமாக Reels பாக்குறீங்களா.. உஷார் மக்களே!

இன்ஸ்டா, யூடியூப்பில் அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது மது அருந்துவதை விட 5 மடங்கு ஆபத்தானது என நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது நினைவாற்றல், கவனம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கிறதாம். டோபமைன் அதிகமாக சுரப்பதால், மூளை எப்போதும் விரைவான தூண்டுதலை மட்டுமே விரும்பும் விதமாக பழகிவிடுகிறது. இதனால், எந்த விஷயத்திலும் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
News August 13, 2025
‘குடும்பமே என்னை கொன்று விடும்’.. பெண்ணுக்கு சோகம்

‘என்னை அழைத்துச் செல். வீட்டில் சொல்பவரை நான் திருமணம் செய்ய மறுத்துவிட்டால், என் குடும்பத்தினர் என்னை கொன்று விடுவார்கள்.’ குஜராத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பெண், தனது காதலனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ் இது. காதலன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான பெண்ணின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. ஜூனில் நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.