News May 23, 2024
ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு ₹59,655 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்திருப்பது மத்திய அரசின் தரவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. ஆயத்த ஆடை, கைத்தறி, பருத்தி & செயற்கை நூலிழை, துணி ரகங்களை உள்ளடக்கிய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. குஜராத் ₹44,106 கோடி, மஹாராஷ்டிரா ₹33,122 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்துள்ளன.
Similar News
News March 10, 2026
அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்(ECA) என்றால் என்ன?

GAS சிலிண்டர் விவகாரத்தில் Essential Commodities Act-ஐ <<19343648>>மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது<<>>. 1955-ம் ஆண்டு ECA சட்டம் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்கிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களான உணவு பொருள்களின் பதுக்கல், கள்ளச்சந்தையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மீறுவோருக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
News March 10, 2026
BREAKING: இந்திய அணிக்கு ₹131 கோடி பரிசு

T20 WC கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி பரிசு அறிவித்துள்ளது. இந்த பரிசுத் தொகை அணியின் 15 வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் பிற துணை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். வெகுமதித் தொகையில் பெரும்பகுதி வீரர்களுக்கும், துணை ஊழியர்களின் தொகை அவர்களது படிநிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
News March 10, 2026
ஒரு லிட்டர் ஆயில் கூட வெளியே வராது: ஈரான்

<<19342545>>எண்ணெய் கப்பல்களை தடுத்தால்<<>> கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்ந்தால் எதிரி நாடுகளின் கச்சா எண்ணெயை ஒரு லிட்டர் கூட வெளியே விடமாட்டோம் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே எண்ணெய் விலைகள் உயரும் என்று கவலையில் உள்ள நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


