News August 14, 2025

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

image

CM ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் DCM உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 14, 2025

தூய்மை பணியாளர்களுக்கு ₹3.5 லட்சம் கடன்: தமிழக அரசு

image

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், CM தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு, பணியின்போது இறந்தால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம், குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவி, தொழில் தொடங்க ₹3.5 லட்சம் கடன் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

News August 14, 2025

J&K வழக்கு: பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய SC

image

ஜம்மு & காஷ்மீருக்கான (J&K) சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு 2019-ல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான இன்றைய விசாரணையின்போது, 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய கோர்ட், J&K-யின் நிலையை கவனிக்காமல் விட்டுவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

News August 14, 2025

சற்றுமுன்: ‘யுத்த நாயகி’ காலமானார்..

image

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் லெப்டினன்ட் ஆஷா சஹாய் (97) பாட்னாவில் காலமானார். ஜப்பானில் பிறந்த இவர், நேதாஜியால் ஈர்க்கப்பட்டு, 17 வயதில் INA-வில் சேர்ந்தார். இந்திய தேசிய ராணுவத்தின் (INA) ஜான்சி ராணி படைப்பிரிவில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர். இவரது தந்தை நேதாஜிக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்தார். நாளை 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் வேளையில், மகத்தான தியாகியை இந்தியா இழந்துள்ளது.

error: Content is protected !!