News January 24, 2025
கூடுதல் மண்ணெண்ணெய் கேட்கும் தமிழகம்

TNல் கேஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத, ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இதற்காக TNக்கு மாதம் ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்படுவதால், கார்டுதாரர்களுக்கு 1L கூட வழங்க முடியாமல் முதலில் வருவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனால், TNக்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது.
Similar News
News February 9, 2026
ஒரு நிமிடம் போதும்.. வேலை அழுத்தத்தை குறைக்கலாம்!

அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களா? வேகஸ் நரம்பை தூண்டுவதன் மூலம், இந்த மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்கு நீங்கள், மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கவும். இடைநிறுத்தி மீண்டும் மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை வெளியேவிடவும். இதை 4-5 முறை செய்தால், மன அழுத்தம் குறையும்.
News February 9, 2026
சற்றுமுன்: விஜய் அவசர அறிவிப்பு

தவெக மா.செ.,க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக விஜய் திடீரென அறிவித்துள்ளார். நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ள ஆலோசனையில், மா.செ.,க்களுடன் விஜய் தனித்தனியே பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு தொகுதியிலும் தவெகவுக்கு உள்ள பலம் மற்றும் பலவீனம் குறித்து அவர் கேட்டு தெரிந்துகொள்ள உள்ளாராம். மேலும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பான அறிவுரைகளையும் விஜய் வழங்க உள்ளார்.
News February 9, 2026
வருங்கால சந்ததியினருக்கான நார்வேயின் சூப்பர் பிளான்!

1969-ல் வட கடலில் கண்டுபிடிக்கப்பட்ட கச்சா எண்ணெய் வளத்தை நார்வே மிகவும் வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளது. எண்ணெய் வருமானத்தை செலவழிக்காமல், வருங்கால சந்ததியினருக்காக சேமித்து, அதை உலகெங்கிலும் முதலீடு செய்வதற்காக Government Pension Fund Global என்ற நிதி நிறுவனத்தை உருவாக்கியது. இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு ₹180 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிதி ஓய்வூதிய செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.


