News January 3, 2025
AI உதவியுடன் தமிழ் மொழி மேம்பாடு: அமைச்சர் பிடிஆர்

மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் உலகில் பரவலாக தமிழ் மொழியை விரிவுபடுத்தவும் முடியும் என்கிற வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ‘பாஷினி’ செயலி மூலம் PM மோடியின் உரைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.
Similar News
News September 14, 2025
நாளையே கடைசி: உதவித்தொகையுடன் வேலை

திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள 760 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பதவிக்கேற்ப ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 27. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹11,000, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,000 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 14, 2025
BREAKING: அசாமில் நிலநடுக்கம்

அசாமில் சற்றுநேரத்திற்கு முன்பு (இன்று மாலை 4.41 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சோனிட்புர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கூடுதல் விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News September 14, 2025
உப்பை குறைங்க 100 வயசு வரை வாழலாம்

ஜப்பானில் 100 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதில் 88% பேர் பெண்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும், மீன், காய்கறிகள் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணமாம். அதுமட்டுமல்ல, ஜப்பானியர்கள் உணவில் உப்பின் அளவை குறைவாக பயன்படுத்துவதும் மாரடைப்பு, புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கிறதாம்.