News March 16, 2024
புளியந்தோப்பு: ரூ.8.84 கோடியில் சிறுவர் பூங்கா

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நீர்வளத்துறை சார்பில், சமுத்திரம் ஏரியில் ரூ.8.84 கோடி மதிப்பில் புதிதாக சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (16.03.2024) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Similar News
News November 1, 2025
தஞ்சை: கார் மோதி பரிதாப பலி

தஞ்சை அடுத்த கீழதிருவிழாபட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் (70) சம்பவத்தன்று இரவு திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் புதுக்குடி பேருந்து நிலையம் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது தஞ்சை நோக்கி வந்த கார் ரங்கராஜ் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 1, 2025
தஞ்சை: போக்சோ வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கூகூரை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் கடந்த 2023-ம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 17 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் நாச்சியார்கோவில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5000 அபராதமும் விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
News November 1, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

பேரரசர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று (நவ.,01) ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். சதய விழா நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க.


