News May 4, 2024
போர்க்கால நடவடிக்கை எடுங்க

கோடை வெயில் காரணமாக தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து, சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசை டிடிவி வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு ₹15 – ₹20 வரை பணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News November 17, 2025
PTR-ஐ எதிர்த்து போட்டியிடுகிறாரா பிரேமலதா?

யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் தேதிமுக சஸ்பென்ஸாக வைத்து இருக்கிறது. இந்த நிலையில், அமைச்சர் PTR-ன் மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று மதுரை தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை விஜயகாந்தின் சொந்த ஊர்; இதனால், அங்கு பிரேமலதா களமிறங்கினால் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 17, 2025
சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News November 17, 2025
BREAKING: கனமழை.. முதல் மாவட்டமாக விடுமுறை

நள்ளிரவில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாகைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


