News September 22, 2024

எடுத்துச்செல்லப்பட்டு பொருட்கள் ஒப்படைப்பு

image

குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 297 பொருள்கள் இந்திய வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் இதுவரை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 640 பழங்கால பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

Similar News

News August 10, 2025

MGRஐ மீண்டும் தாக்கிய விசிக

image

MGR குறித்து பேசிய திருமா அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று இபிஎஸ் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வன்னி அரசு, வெறுமனே கருணாநிதி வெறுப்பு மற்றும் தனக்கிருந்த சினிமா புகழை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்தவர் <<17349030>>MGR<<>>. மற்றபடி அவருக்கு எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லை. இன்னும் உரத்துச் சொல்வோம் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனியக் கும்பல்தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

News August 10, 2025

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News August 10, 2025

அமைச்சரின் பேச்சால் தூய்மை பணியாளர்கள் அதிருப்தி

image

‘பணி நிரந்தரம்’ செய்யக்கோரி, தூய்மைப்பணியாளர்கள் தலைநகரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதன்பின் அவர், ‘பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே என பேசியிருந்தார். அதேபோல், பேச்சுவார்த்தையின்போது அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!