News September 27, 2024

55,000 ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட்

image

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Similar News

News November 1, 2025

சற்றுமுன்: புதன்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

image

₹50,000 வரை பரிசுகளை வெல்லும், மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவ குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE

News November 1, 2025

தென் தமிழகத்தில் மோசமான தோல்வியை EPS சந்திப்பார்: TTV

image

EPS-ன் பதவி வெறியால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனை விட மூத்த நிர்வாகி ஒருவரும் கிடையாது எனவும், 2021-ஐ விட 2026 தேர்தலில், தென் தமிழகத்தில் மிக மோசமான தோல்வியை EPS சந்திப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், EPS-ஐ பதவியில் அமர வைத்த நாங்கள் துரோகியா, அவர் துரோகியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 1, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000 கிடைக்குமா? வந்தது அப்டேட்

image

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த உணவு பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள், இந்த தகவல் வெறும் வதந்தியே எனத் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசித்து CM ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

error: Content is protected !!