News September 27, 2024
55,000 ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News November 26, 2025
பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் டிச.7, 25 தேதிகளில் நடைபெறவுள்ள செவ்வாய் பெயர்ச்சிகளால் பின்வரும் 3 ராசிக்காரர்கள் அதிக நன்மைகள் பெறுவர் எனக் கணிக்கப்படுகிறது *கன்னி: நிதிச்சிக்கல்கள் குறையும், முதலீடு லாபம் தரும். *மகரம்: புதிய சொத்துகள் வாங்கும் யோகம் தொடங்கும், நிதிச்சிக்கல்கள் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கும்பம்: டிசம்பர் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும். தம்பதிகள் உறவு மேம்படும். வெற்றியும் லாபமும் கிட்டும்.
News November 26, 2025
6,000 பேரை பணிநீக்கம் செய்யும் HP

AI-ன் வரவால் பல டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2028-க்குள் 4,000 முதல் 6,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக HP தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே AI எவ்வாறு பணியாற்றும் என்பதை ஆய்வு செய்து வந்ததாகவும், இந்த பணிநீக்கத்தின் மூலம் நிறுவனம் ₹8,926 கோடியை சேமிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், இது நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.
News November 26, 2025
விஜய் இதயம் நொறுங்கி போயிருந்தார்: ஷ்யாம்

விஜய்க்கு தினமும் மெசேஜ் செய்து, வாரத்திற்கு ஒரு முறையாவது பேசிவிடுவேன் என ஷ்யாம் தெரிவித்துள்ளார். ஆனால், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்யை 5 நாள்களுக்கு மேலாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும், அந்தளவிற்கு அவர் இதயம் நொறுங்கி போயிருந்ததாகவும் ஷ்யாம் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையில் மிகவும் வலி நிறைந்த கட்டத்தை விஜய் கடந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.


