News September 27, 2024
55,000 ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News January 4, 2026
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன கிடைக்கும்?

பொங்கல் பரிசில் ₹3,000 ரொக்க பணத்தோடு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, வேட்டி & சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளன. இவை அனைத்தும் பொங்கலுக்கு முன்பாக நியாயவிலை கடைகள் வழியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளது. இன்று முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று நீங்கள் பெற்றலாம்.
News January 4, 2026
இவர்களுக்கு பொங்கல் பணம் ₹3,000 கிடைக்காது

தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை புதிய ரேஷன் கார்டுகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. ஒருவேளை பொங்கலுக்கு முன் அவர்களின் ரேஷன் கார்டுகள் Activate ஆகவில்லை என்றால், லட்சக்கணக்கானோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் ரொக்கப்பணம் ₹3,000 கிடைக்காது என கூறப்படுகிறது.
News January 4, 2026
அரசு ஊழியர்களை தெருவில் நிறுத்தியது BJP: பெ.சண்முகம்

TN அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என கூறிய நயினாருக்கு CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர், அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது BJP ஆட்சிதான் என்று சாடிய அவர், நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை BJP அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் நயினாருக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.


