News September 3, 2025
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காக துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
*கோழைகளே பாவ காரியங்களை புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருபோதும் பாவம் செய்யார்.
*சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
*எந்த வேலையாக இருந்தாலும் அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
*உறுதியுடன் இரு, அதற்கு மேலாக தூய்மையானவனாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.
Similar News
News September 3, 2025
கேன்சர் ஏற்படும் அபாயம்; Nail Polish-ஐ தடை செய்த அரசு!

பெண்கள் பயன்படுத்தும் Gel Nail Polish, கருவுறுதல் பிரச்னை, கேன்சர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? Gel NailPolish-ல் உள்ள TPO எனும் நச்சுப்பொருள் பெண்களுக்கு இப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறதாம். இதனால் சலூன்களில் உள்ள TPO கலந்த Gel Nailpolish-ஐ ஐரோப்பா தடை விதித்துள்ளது. இந்தியாவிலும் சலூன்களில் இந்த Nail Polish-கள் இருப்பதால் பெண்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
News September 3, 2025
10% கமிஷன் வாங்கும் அமைச்சர்: இபிஎஸ் அட்டாக்

எங்கு பத்திரப்பதிவு நடந்தாலும் அமைச்சர் மூர்த்தி 10% கமிஷன் வாங்குவதாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் EPS பேசியுள்ளார். பத்திரப் பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுகிறது என மக்கள் பேசுவதாக கூறிய அவர், அமைச்சருக்கு கமிஷன் கொடுக்காவிட்டால் சொத்தை பதிவு செய்ய முடியாது எனவும் அந்தளவு அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 3, 2025
தவெக – காங்., கூட்டணி? செல்வப்பெருந்தகை மறுப்பு

2026 தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய கூட்டணியை அமைக்கும் முனைப்பில் தவெக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தவெக – காங்., இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படியான எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது பற்றி யாரும் தவெகவில் இருந்து பேசவில்லை என்ற அவர், காங்.,ன் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.