News May 10, 2024
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு

23 வகையான நாய் இனங்களை வளர்க்கத் தடை விதித்த உத்தரவை, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து, மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை விதிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்றத் தடை உத்தரவு உள்ளதால், தமிழக அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டு அரங்கில் பெரும் விபத்து

மதுரையில் விறுவிறுப்பாக தயாராகி வரும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டு அரங்கில் 100 அடி கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது. கிரேன் மூலம் நிறுவ முயன்றபோது ரோப் அறுந்ததில் கொடிக்கம்பம் கார் ஒன்றின் மீது விழுந்தது. இதில், கார் அப்பளம்போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஓடிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News August 20, 2025
இது போலியானது! யாரும் ஏமாற வேண்டாம்!

ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியதாக தகவல் வெளியாக, ரசிகர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு டிக்கெட் புக் செய்தனர். ஆனால், தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் விற்பனை போலியானது என்றும், அதிகாரப்பூர்வமாக டிக்கெட் விற்பனை இன்னும் தொடங்கவில்லை என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆகவே ரசிகர்களே உஷாரா இருங்க!
News August 20, 2025
PM, CM பதவி பறிப்பு மசோதா லோக்சபாவில் தாக்கல்

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் இருந்தால், அவர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதாவை லோக்சபாவில் அமித்ஷா தாக்கல் செய்தார். மத்திய அரசின் இந்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்