News April 21, 2025
ஹெல்மெட் இல்லைனா சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது, பொது இடங்களில் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டால் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 28, 2025
மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சீர்காழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். இதில் சிறுமி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த சுபாஷ் (25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுபாஷை போலீசார் கைது செய்தனர்
News December 28, 2025
தேனியில் 1.25 கோடி மோசடி.!

பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவராக உள்ளார். இவரது நண்பரான ஆசிக்ராஜா என்பவர் செல்போன் கடை நடத்துவதுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 2022 ஏப்ரலில் முகமதுசித்திக்கிடம் ஆசிக்ராஜா ரூ.1.25 கோடி கடன் பெற்றார். ஆனால் அதை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றினார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் ஆசிக்ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 28, 2025
ஆட்சியில் பங்கு கேட்டுள்ளோம்: செல்வப்பெருந்தகை

சமீபமாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் அதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இது குறித்து பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில், அவர் இந்த கோரிக்கையை CM ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தமிழக காங்கிரஸும் அதையே விரும்புவதாக அவர் கூறினார்.


