News March 24, 2025

சுஷாந்த் தற்கொலை .. ரியா வழக்கறிஞர் விளக்கம்

image

சுஷாந்த் சிங் தற்கொலையில் ரியா சக்ரவர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவதாக அவரது வழக்கறிஞர் மனேஷிண்டே விளக்கமளித்துள்ளார். சுஷாந்த் இறக்கும்போது 2 -3 வேலைக்காரர்கள் வீட்டில் இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மரணத்திற்கான காரணம் மூச்சுத்திணறல் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி இருந்தபோதிலும் ரியாவை சுஷாந்த் குடும்பத்தினர் சிக்க வைத்ததாக குற்றம் சாட்டினார்.

Similar News

News December 1, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஒரு கிராம் ₹12 ஆயிரத்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹12,070-க்கும், சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹96,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

News December 1, 2025

அமித்ஷா வருகைக்காக காத்திருக்கிறாரா ஓபிஎஸ்?

image

டிச.15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என EPS-ஐ எச்சரித்திருந்த ஓபிஎஸ், NDA கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வார இறுதியில் சென்னை வரவிருக்கும் அமித்ஷா, தங்கள் தரப்பை அழைத்து பேசுவார் என OPS எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். ஒருவேளை பேசவில்லை என்றால், விஜய் பக்கம் செல்வது குறித்து டிச.15-ல் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

News December 1, 2025

இந்தியாவுக்கு படையெடுக்கும் ஜப்பான் நிறுவனங்கள்!

image

வளர்ந்து வரும் பொருளாதாரம், குறைந்த கட்டுமான செலவு, அலுவலகங்களின் வாடகை உயர்வால் ஜப்பானின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. ஜப்பானில் ரியல் எஸ்டேட்டில் 2-4% மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் 6-7% வரை லாபம் ஈட்ட முடியும். எனவே, மிட்சுய் ஃபுடோசன், சுமிடோமோ ரியால்டி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் சுமார் ₹60,000 கோடி அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.

error: Content is protected !!