News August 24, 2024
KKR அணி கேப்டனாகும் சூர்யகுமார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் IPL மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், 2025 முதல் அணியை, SKY வழிநடத்த வேண்டும் என KKR அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய T20 அணியின் கேப்டனாக SKY உள்ளதால் KKR நிர்வாகம் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், ஷ்ரேயஸ் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News December 13, 2025
பொங்கல் பரிசு ₹3,000.. வெளியான முக்கிய தகவல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நிதி ஆதாரங்களை திரட்ட அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாம். குறிப்பாக, அதிக லாபத்தில் இயங்கும் துறைகளிடம் கூடுதல் நிதி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிச., கடைசி வாரத்தில் பொங்கல் பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 13, 2025
₹10,000 தந்தாலும் முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காது: அசாம் CM

அரசின் நலத்திட்டங்களை விட, சித்தாந்தங்களே வாக்களிப்பதை உறுதி செய்வதாக அசாம் CM ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். ₹10,000 கொடுத்தாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேசி வரும் நிலையில், பாஜக ஆளும் அசாம் CM-ன் இந்த பேச்சு விவாதத்தை எழுப்பியுள்ளது.
News December 13, 2025
ரஜினிக்காக 7 நாள்கள் உண்ணாவிரதமிருந்த ஸ்ரீதேவி!

2011-ம் ஆண்டு ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அப்போது அவருக்காக நடிகை ஸ்ரீதேவி உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். கிளாசிக் ஜோடியான ரஜினி – ஸ்ரீதேவிக்கு இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. ரஜினி உடல்நலம் பாதிக்கபட்டுள்ளார் என்ற செய்தி அறிந்த ஸ்ரீதேவி, ஷீரடி சாய் பாபாவிடம் வேண்டிக் கொண்டு, 7 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். என்ன ஒரு ஃபிரெண்ட்ஷிப்’ல!


