News August 24, 2024
KKR அணி கேப்டனாகும் சூர்யகுமார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் IPL மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், 2025 முதல் அணியை, SKY வழிநடத்த வேண்டும் என KKR அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய T20 அணியின் கேப்டனாக SKY உள்ளதால் KKR நிர்வாகம் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், ஷ்ரேயஸ் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News November 27, 2025
சப்போட்டா பழத்தின் நன்மைகள் தெரியுமா?

இயற்கையாகவே இனிப்புமிக்க பழங்களில் ஒன்று சப்போட்டா. நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட இதில் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக *செரிமானத்திற்கு உதவுகிறது *உடனடி ஆற்றலை வழங்கும் *பார்வை மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது *எலும்புகள் வலுவாகும் *இரைப்பை, குடலுக்கு நல்லது *ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
News November 27, 2025
இந்த நாடுகளிலும் UPI வேலை செய்யுமே.. தெரியுமா?

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் UPI-க்கு பெரும் பங்கு உள்ளது. UPI மூலம் பணம் செலுத்துதல், இப்போது இந்தியா மட்டுமில்லாமல் வேறு சில நாடுகளிலும் உள்ளது உங்களுக்கு தெரியுமா? இந்த நாடுகளுக்கு, இந்தியர்கள் சென்றால், அவர்கள் எளிதாக UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 27, 2025
TN-ல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: அன்புமணி

தஞ்சையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அன்புமணி, தமிழகத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை தொடர்வதாக தெரிவித்துள்ளார். TN-ல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடப்பதாக கூறிய அவர், யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க CM நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


