News June 21, 2024

கள்ளக்குறிச்சியில் கணக்கெடுப்பு தொடங்கியது

image

விஷச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. வீடு வீடாகச் சென்று அங்கன்வாடி பணியாளர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனக் கூறிய நிலையில், தற்போது இந்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

Similar News

News November 15, 2025

ஜப்பானில் இந்து கடவுள்கள் PHOTOS

image

6-9 ஆம் நூற்றாண்டுகளில் சீனா மற்றும் கொரியா வழியாக பல இந்து கடவுள்கள் ஜப்பானுக்குக் சென்றுள்ளன. அவர்களின் உருவப்படங்கள் பெரும்பாலும் இந்து மற்றும் பௌத்த கூறுகளைக் கலந்து, ஜப்பானிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளன. சில முக்கிய இந்து கடவுள்கள், ஜப்பானில் என்ன பெயரில், எப்படி இருக்கின்றனர் என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 15, 2025

தூய்மை பணியாளர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி

image

தூய்மை பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்கவே, அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியுள்ளதாக அன்புமணி சாடியுள்ளார். 107 நாள்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு, திமுக அரசு இதுவரை முன்வரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களது பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமாறும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

News November 15, 2025

நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான தவெக

image

EC கூட்டங்களில் தவெகவிற்கு அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியிருந்தார். இதில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கோயம்பேட்டில் உள்ள மாநில EC முகவரிக்கு தவெகவினர் அனுப்பியுள்ளனர். ஆனால் தமிழகத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கின் அலுவலகம் தலைமை செயலகத்தில் உள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டி தவெகவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

error: Content is protected !!