News April 9, 2025
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

காப்பீடு உரிமை கோரும் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. சோஹம் ஷிப்பிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளை செயல்படுத்தவில்லை என்பதற்காக இழப்பீடு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தது. பின்பற்ற முடியாத நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. நுகர்வோரிடம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 7, 2025
சரித்திரம் படைத்தார் அபிஷேக் சர்மா!

ஒரே ஆண்டில் T20-ல் 100 சிக்ஸர்களை கடந்த ஒரே இந்தியர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில், சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 3 சிக்ஸர்களை விளாசி இச்சாதனை படைத்துள்ளார். 2025-ல் T20 கிரிக்கெட்டில், தற்போது வரை அவர் 101 சிக்சர்களை அடித்துள்ளார். இப்போட்டியில் முதலில் பஞ்சாப் 233/6 ரன்களை குவிக்க, சர்வீசஸ் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
News December 7, 2025
கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

தவெக கூட்டணியில் TTV, OPS இணைவார்கள் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய KAS, இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என TTV, OPS-க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிலால் TTV, OPS உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 7, 2025
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் சென்னையில் காலமானார்

இலங்கையின் Ex அமைச்சர் செல்லையா ராஜதுரை(98) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 – 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் MP-யாக இருந்துள்ளார். 1979-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய இவர் MGR, சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். #RIP


