News April 9, 2025
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

காப்பீடு உரிமை கோரும் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. சோஹம் ஷிப்பிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளை செயல்படுத்தவில்லை என்பதற்காக இழப்பீடு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தது. பின்பற்ற முடியாத நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. நுகர்வோரிடம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 18, 2025
பண மழை கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் 21-ம் தேதி, உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் பெறும் ராசியினர்: *ரிஷபம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும், முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும், வணிகத்தில் லாபம் பெருகும் *சிம்மம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம், வருமானம் பெருகும் *துலாம்: தொடர்ந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும், நிலம் வாங்க வாய்ப்பு, நேரம் சாதகமாகும்.
News September 18, 2025
SCIENCE: காக்கைகள் உங்களை கொத்துவது ஏன் தெரியுமா?

காக்கைகள், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபரை, சில ஆண்டுகள் கூட ஞாபகம் வைத்து பழிவாங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. காக்கையின் மூளையில் உள்ள அமிக்தாலா எனும் பகுதிதான், மனிதர்களின் முகங்களை நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறதாம். எனவே, காக்கையை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தான், அது உங்கள் தாக்குமாம். காக்கையிடம் குட்டு வாங்கிய அனுபவம் இருக்கா?
News September 18, 2025
வருமான நிலையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது: CEA

பின்தங்கிய வருமான நிலையிலிருந்து, நடுத்தரமான வருமான நிலைக்கு வந்ததில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த இவ்வளவு பெரிய நாடும் சமூக, பொருளாதார மாற்றத்தை ஜனநாயக வழியில் முயற்சிக்கவில்லை என பெருமிதப்பட்டுள்ளார். நம்முடைய வெற்றி பெற்ற திட்டங்களிலிருந்தும் நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.