News April 9, 2025
இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

காப்பீடு உரிமை கோரும் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. சோஹம் ஷிப்பிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளை செயல்படுத்தவில்லை என்பதற்காக இழப்பீடு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தது. பின்பற்ற முடியாத நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. நுகர்வோரிடம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 10, 2026
தமிழகத்தில் கோர விபத்து.. அடுத்தடுத்து பலி (PHOTO)

நேற்று நள்ளிரவில் நடந்த கோரச் சம்பவம் ஒன்று தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலம் நங்கவள்ளி டூ ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பைக் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தலை நசுங்கி எடப்பாடியை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். எதனால் விபத்து நடந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 10, 2026
அமித்ஷாவுக்கு என்ன கொழுப்பு: வைகோ

திராவிட இயக்கம் தனது நாடி, நரம்பு, சுவாசத்தில் கலந்திருப்பதாக வைகோ பேசியுள்ளார். திராவிட இயக்க கோட்டையை அடியோடு ஒழித்து விடுவோம், துடைத்து எறிவோம் என பேசும் அமித்ஷாவுக்கு என்ன கொழுப்பு, ஆணவம் என்ற அவர், மோடி பிரதமராக இருக்கும் தைரியத்தில் இப்படி பேசுகிறீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு கூட்டம் மத வெறியோடு உள்ளது எனவும் அவர்களை அகற்றவேண்டும் என்றும் கூறி பாஜகவை சாடியுள்ளார்.
News January 10, 2026
காங்கிரஸின் 3வது பிளான்.. கார்த்தி சிதம்பரம் Open Talk

தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அரசியலில் என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கிறது என்ற சிந்தனை இருக்கத்தானே செய்யும் என்றார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக 3வது செயல்திட்டம், அதிகார ஆசை, விரிவாக்கப்பட்ட சிந்தனை இருக்கக்கூடாதா என கேட்ட அவர், அதுபோன்ற சிந்தனைகள் இருந்தால்தான் நல்லது என கூறி உண்மையை உடைத்தார்.


