News April 3, 2025
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு!

மே.வங்கத்தில், 25,000 பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மம்தா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்ஜெய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது. மேலும், நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனத்தை 3 மாதங்களுக்குள் புதிதாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 29, 2025
நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமித்ஷா

60-வது டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு, ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா, அடுத்த மாநாட்டுக்குள் இந்தியாவில் நக்சலிஸம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சூளுரைத்துள்ளார். நக்சலிஸத்தை முற்றிலும் ஒழிக்க, பாஜக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். நக்ஸலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014-ல் 126ஆக இருந்த நிலையில், தற்போது ]11 ஆக குறைந்துள்ளது என்றார்.
News November 29, 2025
Ro-Koவால் தூக்கமில்லாமல் இருந்துள்ளேன்: மோர்கல்

SA-க்கு எதிரான முதல் ODI, நாளை (நவ.30) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரோஹித், கோலி இருவரும் ODI-ல் எப்படி விளையாடுவது என்ற அனுபவத்தை கொண்டிருப்பார்கள் என்று நம்புவதாக, பவுலிங் கோச் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். தான், Ro-Ko-வுக்கு எதிராக பந்து வீசியபோதெல்லாம், பல தூக்கமில்லாத இரவுகளை கழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
News November 29, 2025
வெள்ளம் நிவாரண முகாமாக மாறும் கொழும்பு ஸ்டேடியம்

‘டிட்வா’ புயல், இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வெள்ளம் & நிலச்சரிவால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், கொழும்பு பிரேமதாஸ ஸ்டேடியத்தில், சுமார் 3,000 பேரை தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு அடிப்படை வசதிகள், நிவாரண பொருள்களும் வழங்கப்படவுள்ளன.


