News April 3, 2025
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு!

மே.வங்கத்தில், 25,000 பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மம்தா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்ஜெய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது. மேலும், நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனத்தை 3 மாதங்களுக்குள் புதிதாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
BREAKING: அரசு வாபஸ் பெற்றது.. புதிய அறிவிப்பு

விமான நிறுவனங்களுக்கான புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றுள்ளது. நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விமானி வாரத்திற்கு 2 நாள்கள் ஓய்வு பெறலாம், ஒரு இரவில் 2 விமானத்தை மட்டுமே விமானி தரையிறக்க வேண்டும் போன்ற விதிகளை DGCA அண்மையில் அமல்படுத்தியது. தற்போதைய புதிய அறிவிப்பால், விமான இயக்கத்தில் உள்ள பிரச்னைகள் தீரும் என கூறப்படுகிறது.
News December 5, 2025
இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்னை? என்ன நடக்கிறது?

மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும்போது. இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்சனையாக இருக்கிறது? DGCA-வால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட, விமானிகளுக்கு கூடுதலாக ஓய்வு நேரம் என்ற விதி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்காக DGCA 6-18 மாதம் கால அவகாசமும் வழங்கியது. இருப்பினும், இண்டிகோ கூடுதலாக ஒரு விமானியை கூட பணியமர்த்தவில்லை. இதுவே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
News December 5, 2025
பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.


