News March 20, 2025
மணிப்பூர் செல்லும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் உள்பட 6 பேர், வரும் 22ஆம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்கள் சந்திக்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை சூழல் நிலவுகிறது. மெய்தி – குகி இன மக்களுக்கு இடையிலான இடஒதுக்கீடு பிரச்னை வன்முறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
Similar News
News September 18, 2025
ADMK – BJP கூட்டணி உடைந்த கண்ணாடி: செல்வப்பெருந்தகை

அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு எதிரான கூட்டணி என்பதால் அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக – பாஜக கூட்டணி ஒரு உடைந்த கண்ணாடி என்றும், அது ஒட்டவே ஒட்டாது எனவும் விமர்சித்துள்ளார். EPS அமித்ஷாவை மறைமுகமாக சந்திக்க அவசியமில்லை என தெரிவித்த அவர், உண்மைகள் விரைவில் வெளியே வரும் எனவும் கூறியுள்ளார்.
News September 18, 2025
கையில் Bitcoin.. 12 அடிக்கு டிரம்ப்பின் சிலை!

கிரிப்டோகரன்சியை ஆதரித்து வரும் US அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முதலீட்டாளர்கள் 12 அடி உயர சிலை அமைத்துள்ளனர். வாஷிங்டன் DC-யில் அமைந்துள்ள அமெரிக்க கேபிடல் கட்டடத்திற்கு வெளியே அமைந்துள்ள இந்த சிலையில், டிரம்ப் தனது கையில் Bitcoin-ஐ ஏந்தியுள்ளார். வெள்ளி மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள இந்த சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 18, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹50 குறைந்து ₹10,220-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை, மீண்டும் குறைய தொடங்கியதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.