News March 20, 2025
மணிப்பூர் செல்லும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் உள்பட 6 பேர், வரும் 22ஆம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்கள் சந்திக்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை சூழல் நிலவுகிறது. மெய்தி – குகி இன மக்களுக்கு இடையிலான இடஒதுக்கீடு பிரச்னை வன்முறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
Similar News
News March 20, 2025
நாங்கள் அடிமைகள் அல்ல ராஜதந்திரிகள்: கே.பி.முனுசாமி

தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். திமுகவினர் தங்களை பாஜகவின் அடிமைகள் என கூறுவதாகவும், ஆனால் தாங்கள் அடிமைகள் இல்லை, ராஜதந்திரிகள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு மாநில முதல்வரால், மத்திய அரசிடம் இருந்து நிதியைக் கூட வாங்கித் தர முடியவில்லை எனவும் ஸ்டாலினை சாடியுள்ளார்.
News March 20, 2025
அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் வீரையன் என்பவரைத் தாக்கியுள்ளார். இதனால் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில், திருவாரூர் கோர்ட், நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ₹6,000 அபராதம் விதித்துள்ளது.
News March 20, 2025
இன்று IPL கேப்டன்கள் கூட்டம்.. வரப்போகும் முக்கிய மாற்றம்?

IPL அணிகளின் கேப்டன்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பந்து மீது எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. எச்சிலைப் பயன்படுத்தினால், வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். கொரோனா பரவல் காலங்களில் இந்த முறைக்கு ICC தடைவிதித்தது.