News June 18, 2024

நீட் தேர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

image

நீட் தேர்வில் தவறு நடந்தால் ஒப்புக்கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீட் முறைகேடு புகார் தொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் விடுத்துள்ளது. மேலும், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தவறு இழைப்பது சமூகத்துக்கு ஆபத்து என்றும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 24, 2026

இக்கட்டான சூழலில் கைகொடுத்த ‘எத்தனால்’ திட்டம்!

image

பெட்ரோலில் எத்தனால் கலப்பு இக்கட்டான சூழலில் கைகொடுத்துள்ளதாக PM மோடி கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது உள்ள 380 எத்தனால் வடிவமைப்பு ஆலைகளில், 2,000 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இவற்றின் மூலம் கடந்தாண்டில் மட்டும் 4.50 கோடி பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியையும் மிச்சப்படுத்தியுள்ளதாக PM மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

காங்கிரஸில் ப.சிதம்பரத்திற்கு கூடுதல் மவுசு!

image

திமுக – காங்., கூட்டணி உறுதியானதில் ப.சிதம்பரத்தின் பங்கு மிக முக்கியமானது. தேசிய அளவில் மிக முக்கியமான தலைவராக இருந்தாலும், மாநில அரசியலில் தலையிடாமல் இருந்தார். ஆனால், தற்போது தேர்தலில் சீட்டு கேட்டு காங்., தலைவர்கள் பலர் அவரது வீட்டுக் கதவை தட்டுவதால் தமிழக காங்கிரஸில் அவரது மவுசு கூடியுள்ளது. 28 தொகுதிகளில் குறைந்தது 10 சீட்டுகள் அவரது ஆதரவாளர்களுக்கு கிடைக்கும் என்கின்றனர் கதர் வேட்டிகள்.

News March 24, 2026

தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா

image

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேமலதா போட்டியிடுவாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்தில் நேற்று தேமுதிக மா.செ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலத்தில் பிரேமலதாவும், சாத்தூர் அல்லது விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிட வேண்டும் என மா.செ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு இருவரும் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!