News August 9, 2024
மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிந்து அவரை கைது செய்தன. இதில் ஜாமின்கோரி சிசோடியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 17 மாதங்கள் ஆகியும் விசாரணை தொடங்காததால் சிசோடியா பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவருக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டனர்.
Similar News
News December 31, 2025
தமிழகத்தை உ.பி.,யுடன் ஒப்பிடுவது தவறு: காங்., MP

UP-ஐ விட அதிக கடனில் தமிழகம் உள்ளதாக காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். UP-ஐ தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு எனக் குறிப்பிட்ட அவர், இங்குள்ள சுகாதார, சமூக, கல்வி, பொருளாதார, முதலீடு குறியீடுகளை உபி.,யுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அவர் கூறினார். தமிழகம் போட்டி போட வேண்டியது மகாராஷ்டிராவுடன் மட்டுமே என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 31, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 31, மார்கழி 16 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 31, 2025
கூச்சமின்றி பொய் பேசுகிறார் அமைச்சர்: அண்ணாமலை

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக அண்ணாமலை சாடியுள்ளார். TN-ஐ போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக <<18711448>>அமைச்சர் மா.சு.,<<>> கூறிய நிலையில் திருத்தணி சம்பவம், ஆவடியில் கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட செய்திகளை, X-ல் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கொஞ்சம் கூட கூச்சமின்றி பேசும் மா.சு., கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


