News May 7, 2025
பாகிஸ்தானை ஆதரித்தால் தேசதுரோகம்: சித்தராமையா

பாக்.,-க்கு ஆதரவாக கோஷம் எழுப்புவது தேசதுரோகம் என கர்நாடக CM தெரிவித்துள்ளார். மங்களூருவில் ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பிய நபர் கொல்லப்பட்டார். இதுகுறித்து பேசிய சித்தராமையா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அது தேசதுரோகம். அதில் யாருக்கும் எந்த மாற்றக் கருத்துமில்லை; ஆனால், பாக்.,-ஐ எதிரியாக சித்தரித்து அரசியல் செய்யும் கட்சியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
Similar News
News October 15, 2025
ரோஹித், கோலி ஓய்வு குறித்து BCCI விளக்கம்

ஆஸி.,க்கு எதிரான ODI தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதுவே ரோஹித், கோலிக்கு கடைசி தொடராக இருக்கும், அதன்பிறகு ODI-ல் ஓய்வு அளிக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். வீரர்கள் தான் ஓய்வு குறித்து முடிவு செய்வார்கள் எனவும், இந்த 2 வீரர்களின் அனுபவம் இந்திய அணிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 15, 2025
‘டியூட்’ படத்திற்காக தூக்கத்தை தொலைத்த நடிகை

‘டியூட்’ படத்தில் தனக்கு பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருப்பதாக நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால், இரவில் தூங்காமல் வசனங்களை மனப்பாடம் செய்து பயிற்சி எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், தனது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
International Roundup: 9 பேரை கொன்ற இஸ்ரேல்

*வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தியதாக படகின் மீது USA நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். *மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. *அமைதி ஒப்பந்தத்தை மீறி 9 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. *வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு நோபல் பரிசு அறிவித்ததை அடுத்து, நார்வேயில் உள்ள தூதரகத்தை அந்நாடு மூடியது. *கிராமி விருது வென்ற USA பாடகர் டி ஏஞ்செலோ (51) கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார்.