News January 24, 2025
துணை நடிகர் ஜெயசீலன் மரணம்

உடல்நலக்குறைவால் துணை நடிகர் ஜெயசீலன் (40) மரணமடைந்தார். மஞ்சள் காமாலை பாதிப்பால் சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்த இவர், புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
₹5000 கொடுத்த CM.. முன்னாள் அமைச்சர் அட்டாக்

3 மாதத்துக்கான உரிமைத் தொகையை <<19125836>>CM வழங்கியதை<<>> வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். 36 மாதங்கள் மகளிர் உரிமைத்தொகையை திமுக அரசு கொடுக்காமல் இருந்ததாக கூறிய அவர், அதிமுக அழுத்தம் கொடுத்தபின் தான் அதனை வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நேரத்தில் 1.31 கோடி மகளிருக்கு ₹5000 வரவு வைத்தது முழுக்க முழுக்க அப்பட்டமான வாக்கு அரசியல் எனவும், இது மக்களுக்கான தொண்டு ச்ச்ஃப்க்க்ச்ஃப்
News February 13, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + ₹2,000 வந்தது..

அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை சேர்த்து ₹3,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ₹2,000 என சேர்த்து ₹5,000 கிரெடிட் ஆகியுள்ளது. இதனால் 1.31 கோடி உரிமைத் தொகை பயனாளிகள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
News February 13, 2026
ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை கொலை செய்த பெண்!

ஜோதிடரின் பேச்சை நம்பிய பெண் ஒருவர் தாயை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. சுசித்ரா(33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். ஜோதிடர் ஒருவர் தாயாரே சூனியம் வைத்து தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை நம்பிய சுசித்ரா, தாயார் தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவந்துவிட்டது.


