News March 21, 2024

ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்த ஆதரவாளர்கள்

image

ஓபிஎஸ்-க்கு ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என்று பாஜக கறார் காட்டுவதால் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவரச ஆலோசனை மேற்கொண்டார். ஒரு தொகுதியை பெற எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி, கு.ப.கிருஷ்ணன், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஓபிஎஸ் முடிவெடுக்க முடியாமல் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

Similar News

News November 26, 2025

சற்றுநேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம்

image

இன்று ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ள நிலையில், மறுபுறம் தமிழக அரசியலிலும் புதிய புயல் உருவாகியுள்ளது. ஆம்! தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் (11 மணியளவில்) அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று மாலையே விஜய்யை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News November 26, 2025

மும்பை தாக்குதலில் 166 பேர் மரணம்.. தீராத சோகம்

image

இந்தியாவின் இதயத்தை கிழித்த 26/11 மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று. 2008 நவம்பர் 26-ல், LeT அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்து CST ரயில் நிலையம் உள்பட பல இடங்களை கைப்பற்றினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேரின் உயிர் அநியாயமாக பறிபோனது. 60 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த தாக்குதலில், கடைசியில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார்.

News November 26, 2025

சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

image

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!