News October 22, 2025
நெல்லுக்கான ஆதார விலை உயர்வு: சக்கரபாணி

திமுக ஆட்சியில் நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அவர், நெல்கொள்முதல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். குறைவான அளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக EPS-ன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், செப்., முதலே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
Similar News
News January 15, 2026
ELECTION: 200 தொகுதிகளில் திமுக போட்டி?

தவெகவை கைகாட்டி ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்டு வருகிறது. ஆனால், பங்கு கொடுக்க முடியாது என பிடிவாதத்தில் இருக்கும் திமுக, கூட்டணியில் இருந்து காங்., வெளியேறினால், அதற்கு மாற்று வியூகத்தை வகுத்துள்ளதாம். தங்களுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக ஆலோசிக்க வரும் 20-ம் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாம்.
News January 15, 2026
பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான அறுவடை திருநாளை பொங்கல் வைத்து வரவேற்க சிறப்பு நேரங்கள் உள்ளன. அதன்படி, சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம் அதிகாலை 4:30 மணி முதல் காலை 6 மணி வரையாகும். இந்த நேரத்தில் வைக்க முடியாதவர்கள் காலை 7:45 முதல் 8:45 வரை அல்லது 10:35 முதல் 11:30-க்குள் வைக்கலாம். அனைவரது இல்லங்களிலும் அன்பு, இன்பம் பொங்க Way2News சார்பாக வாழ்த்துகிறோம். #பொங்கலோ பொங்கல்.
News January 15, 2026
PM மோடியின் மதுரை பொதுக்கூட்டத்தை தடுத்த EPS

மதுரையில் வரும் 23-ம் தேதி PM மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் திடீரென மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு EPS தான் காரணம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திருப்பரங்குன்றத்தில் PM மோடி தரிசனம் செய்வதாக இருந்தது. இதனால், சிறுபான்மையினரிடம் ADMK-க்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் போய்விடும் என EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.


