News August 11, 2024
ஆணவக் கொலைக்கு ஆதரவா? திருமா கண்டனம்

ஆணவக் கொலைக்கு ஆதரவான கருத்துகளை பரப்புவது கவலையளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆணவக் கொலையை குற்றமில்லை எனச் சொல்வது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும் என்று சாடிய அவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வைத்து அரசியல் நகர்வுகளை நடத்த தங்களுக்கு விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். முன்னதாக, ஆணவக்கொலை என்பது வன்முறையோ, கலவரமோ அல்ல என்று நடிகர் ரஞ்சித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 7, 2026
சுயதொழில் தொடங்க லோன் வேண்டுமா? இதோ திட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹2 லட்சம் கடன் வழங்குகிறது புதிய ஸ்வர்ணிமா திட்டம். இதனை திருப்பி செலுத்த 3 – 8 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க https://nsfdc.nic.in/channel-patrners/scas என்ற இணையதளத்தை பார்வையிடவும். உங்க வீட்டு பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 7, 2026
BREAKING: மகளிருக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்

மானிய விலையில் நாப்கின் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் TN அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் மானிய விலை அல்லது இலவசமாக நாப்கின் வழங்க உத்தரவிடக்கோரி லட்சுமி ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், கூடுதல் முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவது குறித்த விவரங்களை அரசு தெரிவிக்கும் என நம்புவதாக கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
News March 7, 2026
FLASH: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்ந்துள்ளது. அதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $90.90 ஆனது. அதன் தாக்கத்தாலேயே 10 மாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையில் <<19316790>>வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்<<>> விலை இன்று அதிகரித்தது. குறிப்பாக 2020 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் உச்சம் தொட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


