News September 13, 2024

உடம்பில் உள்ள மருக்கள் மறைய சூப்பர் டிப்ஸ்!

image

பலருக்கு கழுத்தை சுற்றிலும், அக்குள் பகுதியிலும் மருக்கள் காணப்படும். கிருமியால் ஏற்படும் இந்த மருவை கிள்ளி விட்டால், பல இடங்களில் பரவி விடும். சிறிது சுண்ணாம்பு எடுத்து, அதன் மீது நீரை விட்டு குலைக்க வேண்டும். பிறகு, வெற்றிலை காம்பை எடுத்து அதன் முனையை கையால் நசுக்கி, அதை அந்த சுண்ணாம்பில் தொட்டு மருக்கள் மீது வைக்க வேண்டும். இப்படி 7 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் மறைந்து விடும்.

Similar News

News November 9, 2025

ஓஷோவின் பொன்மொழிகள்!

image

*வாழ்க்கையில் முக்கியமான ஒரே விடயம், உங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து மட்டுமே. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.

News November 9, 2025

தமிழ் தம்பதியின் கல்யாண பத்திரிகை.. SM-ல் வைரல்

image

சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் தம்பதி அடித்த வரவேற்பு பத்திரிகை, தற்போது உலகளவில் வைரலாகியுள்ளது. மருத்துவ துறையை சேர்ந்த மணமகன், மணமகள் மாத்திரை அட்டை வடிவில் பத்திரிகை அடித்து நண்பர்களுக்கு கொடுத்துள்ளனர். மாத்திரையின் உற்பத்தி இடத்தில் பெற்றோர் பெயரையும், பரிந்துரையில் முகூர்த்த தேதி, நேரத்தை குறிப்பிட்டுள்ளார். எல்லாம் சரி Expiry date இல்லையா என விளையாட்டாக நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

News November 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல்
▶குறள் எண்: 514
▶குறள்: எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
▶பொருள்: எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

error: Content is protected !!