News August 16, 2024
சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம்: சிசோடியா

கெஜ்ரிவால் விடுதலையானதும், அவரது மனைவி சுனிதாவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம் என மனீஷ் சிசோடியா கூறியுள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருந்த நேரத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு சுனிதா பாலமாக செயல்பட்டதாக தெரிவித்த அவர், சுனிதாவின் பரப்புரை பேச்சுக்களை பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் வியப்பு தெரிவித்தார். 17 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் சிசோடியா ஜாமினில் விடுதலையானார்.
Similar News
News November 7, 2025
விஜய் நடத்தியது பித்தலாட்டம்: வைகோ

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை, சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது பித்தலாட்டம் என்று வைகோ விமர்சித்துள்ளார். சம்பவம் நடந்தபோது விஜய் ஏன் திருச்சியில் தங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, உயிரிழப்பு செய்தி அறிந்ததும் சென்னை ஓடிச்சென்று விட்டதாக விமர்சித்துள்ளார். யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என CM பேசிய பின்பும், சகட்டு மேனிக்கு பேசியுள்ளதாக சாடியுள்ளார்.
News November 7, 2025
ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னம்.. கனமழை ALERT

வங்கக்கடலில் நவ.14 மற்றும் நவ.19-ல் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் நாள்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று(நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி, மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என IMD தெரிவித்துள்ளது.
News November 7, 2025
எறும்புக்கு பயந்து பெண் தற்கொலை!

சில விஷயங்கள் மீதான அதீத பயத்திற்கு ஃபோபியா என்று பெயர். அப்படி ஒரு ஃபோபியா, உயிர் ஒன்றை பறித்த சம்பவம் தெலங்கானா, சங்காரெட்டியில் நடந்துள்ளது. Myrmecophobia என்ற எறும்புகள் மீதான தீவிர பயத்தால், கணவனையும், 3 வயது மகளையும் விட்டுவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘இனிமேல் எறும்புகளுடன் வாழ முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


