News September 14, 2024
வெயில் சுட்டெரிக்கும்: RMC

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. உங்கள் பகுதியில் வெயில் எப்படி? கமெண்ட் பதிவிடுங்க
Similar News
News November 13, 2025
Business 360°: ₹4,300 கோடி ஊழல்: TRIL நிறுவனத்துக்கு தடை

*நைஜீரியாவில் ₹4,300 கோடி ஊழல் குற்றச்சாட்டு சிக்கியுள்ள இந்தியாவின் TRIL நிறுவனத்திற்கு உலக வங்கி தடை. *தேசிய பங்குச்சந்தை NIFTY-யின் நிகர லாபம் 61% அதிகரித்து ₹557 கோடியாக உயர்வு. *நாட்டின் சில்லறை பணவீக்கம் 0.25% குறைந்தது. *ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்க JanSamarth இணையதளம் தொடக்கம். *ஜப்பானில் இந்திய ஜவுளி கண்காட்சி தொடங்குவதால், திருப்பூருக்கு ஆர்டர் வர வாய்ப்பு.
News November 13, 2025
CINEMA ROUNDUP: ‘பராசக்தி’ படத்தில் இணைந்தார் யுவன்!

*நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவியின் செல்போனை ஹேக் செய்தவர் கைது செய்யப்பட்டார். *கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது .
*அர்ஜுனின் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
*ஜிவி இசையமைக்கும் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.
News November 13, 2025
தூய்மை பணியாளர்களை ஒடுக்கும் அரசு: டிடிவி தினகரன்

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை, ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயல் என TTV தினகரன் சாடியுள்ளார். சென்னை, கோவை, தூத்துக்குடி என பல பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கும் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


